Monday, November 3, 2014

முத்தம்

தினம் தினம்
ஒரு கவிதை படிக்கிறேன்..

எப்போதும் நீ எனக்குத் தருவது
இரு வரி விமர்சனமும்
ஊக்கப் பரிசாய் ஓர் புன்னகையும்..

என்றேனும்
உன் முத்தத்தை வென்றேதீரும்
என் கவிதை !!!
அன்றே எழுதிவிடுவதாய் உத்தேசம்
இலக்கணம் பிறழப்பிறழ
ஒரு கலிப்பாவை

பரிசாய் பெறப்போவது
இல்லை
பிடுங்கப்போவது
உன் வெட்கத்தை


--ஷர்வன்


குப்பை

இட்ட வளி தெறித்திட்டத்தில் 
திணை மாறியதாம்...

கலம் தாண்டியது , வளை தாண்டததால்
பெயர் மாறியதாம்...

-- ஷர்வன்

Wednesday, October 29, 2014

கவிதை

இயல்புக்கு விளக்கம் ஏனடி ?
என் தமிழுக்கு கன்னி உன்மேல் காதலடி ..

நாம் புணர்வதை ..
அதில் உணர்வதை ..
உலகம் கவிதையென கொண்டாடுதடி ...

- ஷர்வன் 

விழைவு

மகிழ்ச்சி  ஒரு மது
அறிவு ஒரு  கேடு
வாழ்கை ஒரு சாபம்
மரணம் ஒரு வரம்
மதுவிலே மயங்கும் போதே ஒரு வரம் கொடு ..
கேடு தேடும் சபமிடதே .. என் இறைவா ..

- ஷர்வன் 

Thursday, October 9, 2014

விரைவாய் காதலி


காந்திபுரத்திற்கும் , சரவணம்பட்டிகும்
இடையே நெளிந்த பயணத்தில் ,
உன்னிடம் கேட்க
என்னிடம் ஆயிரம் கேள்விகள் இருந்தது ...

காற்றில் அலையும் மேலாடையை
பிடித்துப் பிடித்து
தலையில் இட்டு
கன்னத்தின் வழியாய்
பாதி இதழ் மறைப்பதேனடி ?

அப்படியென்ன !!!
கண் கொள்ளா வெட்கமுமாய்
உதடு கொள்ளா புன்னகையுமாய்
முகம் கொள்ளா இளஞ்சிவப்புமாய்
காற்றோடு அலாவல்?

அந்தச் சிவப்பைக் கொஞ்சம்
குடுவைக்குள் அடைத்துத் தர முடியமா ?

பற்கள் தெரியாமல் நீளமாய்
உன்னால் மட்டும் எப்படி புன்னகைக்க முடிகிறது ?

உன் பெயர் என்ன ?

ஒரு யுகமாய் உன் வண்டியைத் துரத்தும்
நான் உன் ரசிகன் ஆகிவிட்டது
உனக்குத் தெரியமா ?

வண்டியை ஓட்டுவது
உன் அண்ணன் தானே ?

-சரவணம்பட்டி பிரிவில் நான்

ஆசை

சூரியன் உதித்தும் விடியாத காலையில் ,
உறக்கம் கலைந்தும் விழி திறக்கா மயக்கத்தில் ,
உன் தேநீருக்காக கண் மூடிக்கிடந்த நேரத்தில் ,

என் உயிர் பிரிந்திருக்கலாம் ...

- ஷர்வன்

காதல் காளி

புரிதல் தாண்டி உணர்தல் அறிகிறேனடி ,
உணர்தல் ஊர்ந்து , உயிர் புரியுதடி ..
காலமில்லா வெளியில் என் உயிர் ஓடும்
பாதை தெரியுதடி ...
உன் காலடியில் அசுரன் தலை தூக்கி பார்ப்பது
வலியல்லவென புரிந்து கொண்டேன் ..
வரம் வேண்டாம் என் தேவி
வதம் செய்துவிடு என்னை ...

-ஷர்வன்

பேதைப் பெண்ணே

நிலைக்கண்ணாடி முன்
உன் அழகை நீ ரசிப்பதை
நான் ரசித்திருந்தேன்...


மெள்ளத் திரும்பி
பொட்டு அழகா இருக்கா ? என்கிறாய்
என் அசட்டுச் சரிப்பில்
என்ன பதில் கிடைத்ததோ
நீயும் புன்னகைத்துவிட்டு நகர்கிறாய்.....


பேரண்டத்தை வாய் பிளந்து
ரசிக்கும் சிறுவன் நானடி...
ஒரு நட்ஷத்திரம் குறைந்திருக்கா என்று
எண்ணப்போவதும் இல்லை ...
குறைந்திருந்தாலும்
உன் அழகின் முழுமை குறையப்போவதும் இல்லை...


--ஷர்வன்

முத்தம்


வஞ்சம்தானடி ..
நீ என் கண்ணோடு கண் சேர்த்தபோது ,
எனக்கேற்பட்ட மூச்சுத்திணரலுக்கு.

-ஷர்வன்

காதல்தொகை



நிர்வாணம் பாழ் செய் இயலா நட்பில் தொடங்குதடி..

ஒன்றை இழந்தும் பெற்றும் ,
ஒன்றையொன்று சுற்றும் , 
எலெகட்ரான் ப்ரோட்டான் அல்ல ..
வண்ண விசயால் இணைந்திருக்கும்
ப்ரோட்டான்ந்யூட்ரான் நாம்..

கவர்ச்சியால் அல்ல ,
இயல்பால் இணைந்திருக்கும்,
அணு மையம்..

விதைக்குள் பாதுகாக்காப்படும் உயிர் போல்,
அவரவர் சுயம் விளையும் நிலமிது..
இயல்பினால் ஒன்றிருத்தல் அல்ல ,
இயல்பாய் இருத்தலே உறவென்று காண் ... 

--ஷர்வன்

முத்தம்


கொட்டித் தீர்த்த மழையில் , 
உயிருக்குள் ஒரு பிரளயம் ஓய்ந்ததடி, 
ஏனோ கன்னம் தீண்டிய முதல் துளி மட்டும் , 
நினைவில் சிக்கிக்கொண்டு சிலிர்க்குதடி .... 

--ஷர்வன்

முத்தம்


உயிருடன் சதை திண்ணும்
வழக்கமில்லை என்றேன் 

முயற்சித்து பார் என்றாள்

ஏங்கிருந்து தொடங்கவென்றேன்

கோட்டைக்கு நுழைவாயில் 
ஆற்றுக்கு மடவாய் என மொழிந்தாள்.

மருண்டதோ, மயங்கியதோ 
உலகம் இருண்டது மெய்யென்பேன் 

மெல்லக்  கண்திறந்து 
உண்டது, நீயா? நானா? 
தொடுத்தேன் 

எனக்கு பசி குறையவில்லை எனவெதிர்த்தாள்
மூடிய இமை ,அவ்வண்ணமே 

உனக்கும் பசியாறவில்லை எனில் 
உண்டது யார் தான் ?

மயங்கிய விழி திறவாமல் 
கொஞ்சம் பிரிந்த ஈரிதழில்
கீழிதலில் மட்டும் 
கொல் புன்னகை  விஷம் பரவவிட்டாள்

- ஷர்வன்

முத்தம்


அர்த்தமாய் ஊடுருவும் கண்கள் ... 
அழகாய் நெறியும் புருவம் ... 
அழகும் அர்த்தமும் சேரும் நெற்றியில் 
அன்பாய் ஒரு முத்தம் . 

அழகு, அர்த்தம் , அன்பு ... 
இந்த அகர வரிசையில் , ஆயுள் முற்றும் ஆனது. 

என் காதல் நீ, 
என் கடவுள் நீ, 
என் மரணம் நீ... 

- ஷர்வன்

நிகழ் தருணம்

மனம் பிதற்றும் தனிமையடி , 
என் அறிவு , மானம், வெட்கம் , 
துறக்க துணிந்து விட்டேன் ... 
போர்களத்தில், கவசம் 
துறக்க துணிவது போல ,,, 

அலட்சியமாய் இருந்த ஒரு நொடியில், 
பெரும்படை கொண்டு 
என்னுள் என்னை விரட்டியடித்து 
கொடியேற்றும் , 
ஏகாந்தமான பாடல் போல ... 

எனக்குள் நீயடி.. 

- - 

என்னுள் உன்னை தேடி, உனக்குள் தொலைந்துவிட்ட நான்...




நீலக்கடலோரம்...


எட்டி குதிச்ச அலையில ,
ஒரு கைப்பிடி தண்ணி மட்டும் ,
திரும்பி போகாம
பாறை இடுக்குல சிக்கிகிச்சே ...

கைப்பிடி தண்ணி
வெய்யக் காஞ்சு , காணாம போக
காத்து கெடக்க ...
பாசி பாத்து , பேறு தெரியாத செல சீவனும் வளந்து,
அதுவும் ஒரு ஒலகமா மாறிப்போச்சே ...

அங்கயும் ஒரு மீனு வேட்டை யாட
ஒரு மீனு பயந்து ஓடுமோ ...
வேட்டை யாட போன தாய் திரும்பி வர
ஒரு குஞ்சு காத்திருக்குமோ ...
நாலு மீனு , எட்டாகி கெடக்க
காதலும் நடக்குதோ ...

கண்ட கோளத்துக்கு பதில் தெரியாம
என் மூளை நிக்க ,
ஒன்னும் புரியாத ஊமை மனசு
பொல பொலன்னு கண்ணீர் உதுக்க ,
நீலக்கடலோரம் நிக்கிறேன்டி

பாரையோரம்  உருவான ஒலகம் போல
நானும் பொத்தி பொத்தி சேத்து வாரேன்
செல மணி துளிய...

சேத்து வைச்சதுல இருந்து
பார்த்து பார்த்து ஏடுத்து வெச்சுருக்கேன் ...
கொழந்தையா சிரிச்ச சிரிப்பையும் ..
விரக்தியா விழுந்த ஒத்த துளி நீரையும்..
ஏப்போவாவது கடவுள பார்த்த
கொடுக்கலாம்னு ....

- ஷர்வன்

முத்தம்

இருவருமே பொறுமை இழந்துவிட்டோம் ...
என் வார்த்தைகளின் சப்தம் கூடிகொண்டே போனது ...

தொண்டையில் அடைத்து வைத்த அழுகையில் ,
நினைத்த உன் சொற்கள் வழுக்கி விழுந்தது ...

நான் சமாதானதிற்குகாக கேட்டது தான் ,
நீயும் கோபத்தில் தந்தது தான் ,
பட்டும் படாமலும் கன்னம் தொட்ட இதழில்
துளியும் காதல் குறையவில்லை ...

--ஷர்வன்