Tuesday, April 26, 2016

பெரு நிலை

இரவின் மடியில்
தனிமைப் பாடல்
முடிந்தபின்

பகலும் மனிதர்களும்
நோயையும் பேயையும்
போல் பீடித்துக் கொள்கிறது

இரவை நோக்கிய
ஏக்கத்தில்
நகர்கிறது
ஒவ்வொரு பகலும் ...

முடிவிலா ஏகாந்த பெருநிலை
நோக்கிய
ஏக்கத்தில்
நகர்கிறது
ஒவ்வொரு இரவும் ...

-ஷர்வன்