Sunday, June 25, 2023

கண்ணீர் உனதாகுக

 உணர்வுகளற்ற ஒரு தனியறை ,

யார் யாரோ படித்த 

பழைய கவிதை புத்தகம் ,

ஒவ்வொரு வார்த்தையிலும் 

கண்ணீர் வாசம் ,

பிரபஞ்சம் முழுதும் அண்டி இருக்கும் 

காரிருள் போல 

படர் பேருவுவகை 

— ஷ்ரவன்


Thursday, February 23, 2023

ஒரு கால் தூக்கி

என் கால் மண்ணில் படும் என்றோ 
என்னுயிர் பிரியும் அன்றே. 

பிரபஞ்ச பெருங்கூத்து 
அதில் நகையாடா கோமாளிகள் ஆயிரமன்றோ.. 

கூத்தாட யாரூமில்ல 
ஐயோ!!! இங்க கூத்த பார்த்தவனும் உண்டோ.. 

கால் தூக்கி நின்னையப்பா 
என் காலும் மண்ணில் பட வேணுமப்பா.. 

 -ஷர்வன்

Sunday, April 3, 2022

மெய் உணர்வு

என் உயிர் உற்றேகும் உடலே... உன்னாலே உயிர் உணர்வேனே...  --ஷர்வன்

Tuesday, October 12, 2021

கனவு தானே !!

கனவு தான் இதுவும்
விழித்திடு மனமே
 
அறியாமை உழன்று
அறிதலில் உவகை உணர்ந்தனயோ 
கனவு தான் இதுவும் 
விழித்திடு மனமே
 
உவகையுணர உழன்றாக வேண்டுமோ 
இரு நிலையின்றி 
ஒரு உயிர் என்று 
துறவை துணியத் தான் வேண்டுமோ 
 
கனவு தான் இதுவும் 
துணிந்திடு மனமே 
விழித்திடு 
 
--ஷர்வன்

Thursday, February 20, 2020

வாழ்வுடைத்தகைமை

தனியுடைமை பொதுவுடைமை 
பேசும் அறிவாளிகளுள்
உடைமை கொள்தலின் தீமைகள் 
உரைப்பவன் நான்


மெய்யுண்டு உணர்உண்டென்றால், 
உயிராமோ? 
உயிர்த்திருத்தலுண்டு உயிரிலில்லையென்றால்
பொய்யாமோ? 

உன் சிந்தணையை 
நீ பார்த்த நொடியில் 
பிறந்ததன்றொ மாயை

அதை நீயென்று சொன்னால்
நீ மறைந்தொளிந்து போவாயோ? 

இல்லை பேயென்று பெயரிட்டால்
மாயையும் 
மறைந்தொழிந்து போய்விடுமோ? 

அறிவே மாயை
சிந்தனையே அதற்கு சோரு
மாயை வளர சோரு விழையும் சேற்றில் 
 புழுவாய் நெளியுதம்மா வாழ்க்கை

அவ்வாழ்க்கையில் உடைமை கொள்தலின்
தீமைகள் சொல்வேன் கேளாயோ

-ஷ்ரவன்

Friday, July 6, 2018

ஹெத்தையம்மன் கெடாலஜி


ஆணி வேர் வரைக்கும் காய்ச்சுப்போச்சு
மனுஷன் மனசுலயும் ஈரம் பாய
மாரி பெய்யவேணுமம்மா

விண்ணுயர நின்ன
மரமும் மானமும்
பொதராதான் நிக்குதம்மா

ஆடு மாடு போல
நாங்களும் இல பறிச்சு தின்னுதா
வாழணுமா ?

-ஷ்ரவன்

Monday, April 30, 2018

ஓரிரவு

மெய் அறிவென்து யாதெனில்
தன் மெய் உணர்வதேயென்று
உரக்கச் சொல்லியது
நேற்றிரவு.

- ஷர்வன்