Saturday, July 16, 2016

யாதுமானவளே

கவிதைகளெல்லாம் அழகில்லையடி ,
அதற்கு
கருவாய்
உருவாய்
நீ அமைந்த  பின் தான்
உன்மத்தம் ஆகுதடி ...

உவமைகளெல்லாம் உண்ர்ச்சி பெறுவது இல்லை ,
தத்துவமெல்லாம் சிந்தை திறப்பதும் இல்லை,
அதன் உருபொருளாய்
நீ இல்லையெனில் ....

நானுணர்த்த ஒரே  ஞானம் நீயடி ,
நான்
படிக்கும்
படைக்கும்
கவிதைகளெல்லாம்
நீயேதானடி.

-ஷர்வன் 

Sunday, July 10, 2016

யாதுமானவளே

உமையவள் பாதம் பற்றிட
திண்ணம் கொண்டபின் ..

காலமென்ன ..
அதை முடிக்கும்
காலனென்ன

என் சமர் சிவனுடன்.

-ஷர்வன்