Sunday, June 25, 2023

கண்ணீர் உனதாகுக

 உணர்வுகளற்ற ஒரு தனியறை ,

யார் யாரோ படித்த 

பழைய கவிதை புத்தகம் ,

ஒவ்வொரு வார்த்தையிலும் 

கண்ணீர் வாசம் ,

பிரபஞ்சம் முழுதும் அண்டி இருக்கும் 

காரிருள் போல 

படர் பேருவுவகை 

— ஷ்ரவன்


Thursday, February 23, 2023

ஒரு கால் தூக்கி

என் கால் மண்ணில் படும் என்றோ 
என்னுயிர் பிரியும் அன்றே. 

பிரபஞ்ச பெருங்கூத்து 
அதில் நகையாடா கோமாளிகள் ஆயிரமன்றோ.. 

கூத்தாட யாரூமில்ல 
ஐயோ!!! இங்க கூத்த பார்த்தவனும் உண்டோ.. 

கால் தூக்கி நின்னையப்பா 
என் காலும் மண்ணில் பட வேணுமப்பா.. 

 -ஷர்வன்