"தற்குறி"ப்பேற்றல்
Friday, July 6, 2018
ஹெத்தையம்மன் கெடாலஜி
ஆணி வேர் வரைக்கும் காய்ச்சுப்போச்சு
மனுஷன் மனசுலயும் ஈரம் பாய
மாரி பெய்யவேணுமம்மா
விண்ணுயர நின்ன
மரமும் மானமும்
பொதராதான் நிக்குதம்மா
ஆடு மாடு போல
நாங்களும் இல பறிச்சு தின்னுதா
வாழணுமா ?
-ஷ்ரவன்
Monday, April 30, 2018
ஓரிரவு
மெய் அறிவென்து யாதெனில்
தன் மெய் உணர்வதேயென்று
உரக்கச் சொல்லியது
நேற்றிரவு.
- ஷர்வன்
Monday, April 2, 2018
கருங்கடலாகி
முழு மதி கண்ட
கடல் பேசிட
அலை அன்றி
வேறு மொழியேதடி
அங்குலம் அலகாய் கரையேரி வந்து
வானில் உன்னை காணும்
நாளும் வருமோ?
கவிதையில் உவமையில்
கைக்கிளயாய் கிடவோமா?
திரவத்தில் ஒளி கலந்து
நுரையாய் தவழுதடி
நம் காதல்...
சேர்ந்து மகிழ்தல் அல்ல
உணர்விலயத்தல் காதலென்று
சந்தம் சொல்லுதடி என் மொழி.... அலை மொழி...
-ஷர்வன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)