"தற்குறி"ப்பேற்றல்
Saturday, August 5, 2017
வாழ்கை
கண்ணாடிக் கூண்டுக்குள்
எங்கும் என் அறிவின்
பிரதிபலிப்பு
அத்வைதமாய்
நீக்கமற நிறைந்திருக்கும்
ஒருவித கடுப்பு
-ஷர்வன்
யாதுமானவளே
மேகம் சிறை பிடிக்கும்
மாமலையென நிற்கிறாள்.
கட்டித் தழுவி
கண்ணீராய், அவள்
காலடியில் கரைகயில்
கால சுழற்சியில்
என்னை
மறுசுழற்சி செய்கிறாள்.
எப்பாதை சென்றாலும்
எக்கடல் சேர்ந்தாலும்
மீண்டும் உன்னை
கட்டித் தழுவிடும்
வரம் வேணுமடி...
-ஷர்வன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)