ஓம் எனும் ஒலியில் தெடங்கியதாய் ஓர் கூற்று ,
ஒன்றுமிலா வெளியதனில்
ஒளியில் தொடங்கியதாய் ஒரு தேற்றம்,
ஒலி அழகின் உச்சம்
அகரத் தமிழென்று
அறிந்தேனே,
ஒளி அலகின் உச்சம்
அவள் வடிவென்று உணர்ந்தேனே ,
ஒலியும் ஒளியும்
அறிந்ததும் உணர்ந்ததும்
யாவும் அன்னை சக்தியென
தெளிந்தபின்
என் சித்தம் சிவனாகிட கண்டேனே
- ஷர்வன்