Sunday, July 26, 2015

தொக்க நிலா


ஒளி பட்டுத் தெறித்தவிடத்திலெல்லாம்
 உன்னை இழந்த உன்னை ,
இரவில் ,ஒற்றைப் புள்ளியில் மனம் குவிக்கவிட்டு ,
உன்னை மீட்டெடுத்த நான்
உண்மையில்
நான்  உன் இணை கேள்..

மிகுகவர்ச்சி கோள்களென்ன ,
ஓயாமல் கண் சிமிட்டும் நட்ஷத்திரங்களென்ன ,
உன் ஈர்ப்பில் விடுபட முடியா கோலம் ,
நான் செந்தொடைக்  கோளம்.

உன் வழி சேர்ந்து விட்டேன் ..
உன்னியல்பு காத்திட ..
உன் வளி இனையா இணை
நான் உன் துணைக் கோள் ..

விண்வெளி மேடையில் ,
கவர்ச்சி நடனம்..
நேருமில்லா நிரையுமில்லா அசையும் பயணம் ..

--ஷர்வன்

Monday, November 3, 2014

முத்தம்

தினம் தினம்
ஒரு கவிதை படிக்கிறேன்..

எப்போதும் நீ எனக்குத் தருவது
இரு வரி விமர்சனமும்
ஊக்கப் பரிசாய் ஓர் புன்னகையும்..

என்றேனும்
உன் முத்தத்தை வென்றேதீரும்
என் கவிதை !!!
அன்றே எழுதிவிடுவதாய் உத்தேசம்
இலக்கணம் பிறழப்பிறழ
ஒரு கலிப்பாவை

பரிசாய் பெறப்போவது
இல்லை
பிடுங்கப்போவது
உன் வெட்கத்தை


--ஷர்வன்


குப்பை

இட்ட வளி தெறித்திட்டத்தில் 
திணை மாறியதாம்...

கலம் தாண்டியது , வளை தாண்டததால்
பெயர் மாறியதாம்...

-- ஷர்வன்

Wednesday, October 29, 2014

கவிதை

இயல்புக்கு விளக்கம் ஏனடி ?
என் தமிழுக்கு கன்னி உன்மேல் காதலடி ..

நாம் புணர்வதை ..
அதில் உணர்வதை ..
உலகம் கவிதையென கொண்டாடுதடி ...

- ஷர்வன் 

விழைவு

மகிழ்ச்சி  ஒரு மது
அறிவு ஒரு  கேடு
வாழ்கை ஒரு சாபம்
மரணம் ஒரு வரம்
மதுவிலே மயங்கும் போதே ஒரு வரம் கொடு ..
கேடு தேடும் சபமிடதே .. என் இறைவா ..

- ஷர்வன் 

Thursday, October 9, 2014

விரைவாய் காதலி


காந்திபுரத்திற்கும் , சரவணம்பட்டிகும்
இடையே நெளிந்த பயணத்தில் ,
உன்னிடம் கேட்க
என்னிடம் ஆயிரம் கேள்விகள் இருந்தது ...

காற்றில் அலையும் மேலாடையை
பிடித்துப் பிடித்து
தலையில் இட்டு
கன்னத்தின் வழியாய்
பாதி இதழ் மறைப்பதேனடி ?

அப்படியென்ன !!!
கண் கொள்ளா வெட்கமுமாய்
உதடு கொள்ளா புன்னகையுமாய்
முகம் கொள்ளா இளஞ்சிவப்புமாய்
காற்றோடு அலாவல்?

அந்தச் சிவப்பைக் கொஞ்சம்
குடுவைக்குள் அடைத்துத் தர முடியமா ?

பற்கள் தெரியாமல் நீளமாய்
உன்னால் மட்டும் எப்படி புன்னகைக்க முடிகிறது ?

உன் பெயர் என்ன ?

ஒரு யுகமாய் உன் வண்டியைத் துரத்தும்
நான் உன் ரசிகன் ஆகிவிட்டது
உனக்குத் தெரியமா ?

வண்டியை ஓட்டுவது
உன் அண்ணன் தானே ?

-சரவணம்பட்டி பிரிவில் நான்

ஆசை

சூரியன் உதித்தும் விடியாத காலையில் ,
உறக்கம் கலைந்தும் விழி திறக்கா மயக்கத்தில் ,
உன் தேநீருக்காக கண் மூடிக்கிடந்த நேரத்தில் ,

என் உயிர் பிரிந்திருக்கலாம் ...

- ஷர்வன்