Sunday, July 26, 2015

தொக்க நிலா


ஒளி பட்டுத் தெறித்தவிடத்திலெல்லாம்
 உன்னை இழந்த உன்னை ,
இரவில் ,ஒற்றைப் புள்ளியில் மனம் குவிக்கவிட்டு ,
உன்னை மீட்டெடுத்த நான்
உண்மையில்
நான்  உன் இணை கேள்..

மிகுகவர்ச்சி கோள்களென்ன ,
ஓயாமல் கண் சிமிட்டும் நட்ஷத்திரங்களென்ன ,
உன் ஈர்ப்பில் விடுபட முடியா கோலம் ,
நான் செந்தொடைக்  கோளம்.

உன் வழி சேர்ந்து விட்டேன் ..
உன்னியல்பு காத்திட ..
உன் வளி இனையா இணை
நான் உன் துணைக் கோள் ..

விண்வெளி மேடையில் ,
கவர்ச்சி நடனம்..
நேருமில்லா நிரையுமில்லா அசையும் பயணம் ..

--ஷர்வன்

No comments:

Post a Comment