வழிவது
வியர்வையா ?? வெறுப்பா ??
தெரியவில்லை
சற்றியிருக்கும் மனிதர்கள் மேல்
கோபமா ?? கொலை வெறியா ??
புரியவில்லை
முட்டாள்கள் மத்தியில்
வெறுப்பில் கருகிக் கொண்டிருக்கும்
காலை நேர
சாலை நெரிசலில்
என்னிலை மீட்டுத்தரும்
இதமான வானொலி பாடல் போல்
அலுவலகத்தில் அவள் முகம்
-ஷர்வன்