Thursday, January 28, 2016

வேண்டுதல்

கடந்து சென்ற காலமெல்லாம்
ஒரு நொடியாய் சுருங்கிவிட்டதடி.

நொடியாகிட துடிக்கும் ஏதிர்காலம்
என்முன்னே
முடியாமல் நீளுதடி.

நிகழ்காலம் மட்டும்
எங்கென்று தெரியாமல்
காணாமல் போகுதடி.

நிகழ்வுகளெல்லாம்
உணர்வுகளில் ஊறி ,
அறிவில் உலர்ந்து ,
ஞாபகங்களாய் தங்குதடி.

ஞாபகங்கள்
தினம் தினம் வண்ணம் வெளிறிப்போய்,
வெறும்
எண்ணங்களாய் எஞ்சுதடி.

காலச் சல்லடையில் ,
என் எண்ணத் தண்ணீர் தேக்கி
இருத்தி வைக்கும் முயற்சியில் ,
என் நெஞ்சம் பைத்தியம் ஆகுதடி ..

ஒரு பொழுதேனும்
நிகழ் குற்றுழியில்
என் சித்தம் நிறுத்திடவே
அருளாயோடி ...

-ஷர்வன்

No comments:

Post a Comment