Tuesday, August 4, 2015

காதல்

உன் நேர்மையின் வீரம் காண
செய்கையின் கண்ணியம் கண்டிட
நீ விரும்பும் பெண்ணாகிட ,
ஆசை மேவுதடி

நான் விரும்பும் ஆணாய் நீ ஆக வேண்டும்
என்ற ஆசையில்
புது உண்ர்வொன்று சிலிர்ப்பூட்டுதடி

நிலை சிவமும் , அது
நிறை சக்தியும் ,
என்ற பழங் கூற்றில்
உண்மை இல்லையடி ...

பிரபஞ்ச எல்லையில் ...
காலம் ஓய்வெடுக்கும் வேளையில்...
சக்தி தேய்ந்து சிவமாகி
சிவனின் சூன்ய இதயத்தில்
வெடித்துப் பெருகும் சக்தி  கோலத்தின்
நாடக வடிவமடி
நம் காதல் ..

--ஷர்வன்

No comments:

Post a Comment