"தற்குறி"ப்பேற்றல்
Thursday, February 23, 2023
ஒரு கால் தூக்கி
என் கால் மண்ணில் படும் என்றோ
என்னுயிர் பிரியும் அன்றே.
பிரபஞ்ச பெருங்கூத்து
அதில் நகையாடா கோமாளிகள் ஆயிரமன்றோ..
கூத்தாட யாரூமில்ல
ஐயோ!!! இங்க கூத்த பார்த்தவனும் உண்டோ..
கால் தூக்கி நின்னையப்பா
என் காலும் மண்ணில் பட வேணுமப்பா..
-ஷர்வன்
Sunday, April 3, 2022
மெய் உணர்வு
என் உயிர் உற்றேகும் உடலே... உன்னாலே உயிர் உணர்வேனே... --ஷர்வன்
Tuesday, October 12, 2021
கனவு தானே !!
கனவு தான் இதுவும்
விழித்திடு மனமே
அறியாமை உழன்று
அறிதலில் உவகை உணர்ந்தனயோ
கனவு தான் இதுவும்
விழித்திடு மனமே
உவகையுணர உழன்றாக வேண்டுமோ
இரு நிலையின்றி
ஒரு உயிர் என்று
துறவை துணியத் தான் வேண்டுமோ
கனவு தான் இதுவும்
துணிந்திடு மனமே
விழித்திடு
--ஷர்வன்
Thursday, February 20, 2020
வாழ்வுடைத்தகைமை
தனியுடைமை பொதுவுடைமை
பேசும் அறிவாளிகளுள்
உடைமை கொள்தலின் தீமைகள்
உரைப்பவன் நான்
மெய்யுண்டு உணர்உண்டென்றால்,
உயிராமோ?
உயிர்த்திருத்தலுண்டு உயிரிலில்லையென்றால்
பொய்யாமோ?
உன் சிந்தணையை
நீ பார்த்த நொடியில்
பிறந்ததன்றொ மாயை
அதை நீயென்று சொன்னால்
நீ மறைந்தொளிந்து போவாயோ?
இல்லை பேயென்று பெயரிட்டால்
மாயையும்
மறைந்தொழிந்து போய்விடுமோ?
அறிவே மாயை
சிந்தனையே அதற்கு சோரு
மாயை வளர சோரு விழையும் சேற்றில்
புழுவாய் நெளியுதம்மா வாழ்க்கை
அவ்வாழ்க்கையில் உடைமை கொள்தலின்
தீமைகள் சொல்வேன் கேளாயோ
-ஷ்ரவன்
Friday, July 6, 2018
ஹெத்தையம்மன் கெடாலஜி
ஆணி வேர் வரைக்கும் காய்ச்சுப்போச்சு
மனுஷன் மனசுலயும் ஈரம் பாய
மாரி பெய்யவேணுமம்மா
விண்ணுயர நின்ன
மரமும் மானமும்
பொதராதான் நிக்குதம்மா
ஆடு மாடு போல
நாங்களும் இல பறிச்சு தின்னுதா
வாழணுமா ?
-ஷ்ரவன்
Monday, April 30, 2018
ஓரிரவு
மெய் அறிவென்து யாதெனில்
தன் மெய் உணர்வதேயென்று
உரக்கச் சொல்லியது
நேற்றிரவு.
- ஷர்வன்
Monday, April 2, 2018
கருங்கடலாகி
முழு மதி கண்ட
கடல் பேசிட
அலை அன்றி
வேறு மொழியேதடி
அங்குலம் அலகாய் கரையேரி வந்து
வானில் உன்னை காணும்
நாளும் வருமோ?
கவிதையில் உவமையில்
கைக்கிளயாய் கிடவோமா?
திரவத்தில் ஒளி கலந்து
நுரையாய் தவழுதடி
நம் காதல்...
சேர்ந்து மகிழ்தல் அல்ல
உணர்விலயத்தல் காதலென்று
சந்தம் சொல்லுதடி என் மொழி.... அலை மொழி...
-ஷர்வன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)