தனியுடைமை பொதுவுடைமை
பேசும் அறிவாளிகளுள்
உடைமை கொள்தலின் தீமைகள்
உரைப்பவன் நான்
மெய்யுண்டு உணர்உண்டென்றால்,
உயிராமோ?
உயிர்த்திருத்தலுண்டு உயிரிலில்லையென்றால்
பொய்யாமோ?
உன் சிந்தணையை
நீ பார்த்த நொடியில்
பிறந்ததன்றொ மாயை
அதை நீயென்று சொன்னால்
நீ மறைந்தொளிந்து போவாயோ?
இல்லை பேயென்று பெயரிட்டால்
மாயையும்
மறைந்தொழிந்து போய்விடுமோ?
அறிவே மாயை
சிந்தனையே அதற்கு சோரு
மாயை வளர சோரு விழையும் சேற்றில்
புழுவாய் நெளியுதம்மா வாழ்க்கை
அவ்வாழ்க்கையில் உடைமை கொள்தலின்
தீமைகள் சொல்வேன் கேளாயோ
-ஷ்ரவன்
No comments:
Post a Comment