Monday, April 2, 2018

கருங்கடலாகி

முழு மதி கண்ட
கடல் பேசிட
அலை அன்றி
வேறு மொழியேதடி

அங்குலம் அலகாய் கரையேரி வந்து
வானில்  உன்னை காணும்
நாளும் வருமோ?

கவிதையில் உவமையில்
கைக்கிளயாய் கிடவோமா?

திரவத்தில் ஒளி கலந்து
நுரையாய் தவழுதடி
நம் காதல்...

சேர்ந்து மகிழ்தல் அல்ல
உணர்விலயத்தல் காதலென்று
சந்தம் சொல்லுதடி என் மொழி.... அலை மொழி...


-ஷர்வன்

No comments:

Post a Comment