Sunday, April 3, 2022
Tuesday, October 12, 2021
கனவு தானே !!
கனவு தான் இதுவும்
விழித்திடு மனமே
விழித்திடு மனமே
அறியாமை உழன்று
அறிதலில் உவகை உணர்ந்தனயோ
அறிதலில் உவகை உணர்ந்தனயோ
கனவு தான் இதுவும்
விழித்திடு மனமே
உவகையுணர உழன்றாக வேண்டுமோ
இரு நிலையின்றி
ஒரு உயிர் என்று
துறவை துணியத் தான் வேண்டுமோ
கனவு தான் இதுவும்
துணிந்திடு மனமே
விழித்திடு
--ஷர்வன்
Thursday, February 20, 2020
வாழ்வுடைத்தகைமை
தனியுடைமை பொதுவுடைமை
பேசும் அறிவாளிகளுள்
உடைமை கொள்தலின் தீமைகள்
உரைப்பவன் நான்
மெய்யுண்டு உணர்உண்டென்றால்,
உயிராமோ?
உயிர்த்திருத்தலுண்டு உயிரிலில்லையென்றால்
பொய்யாமோ?
உன் சிந்தணையை
நீ பார்த்த நொடியில்
பிறந்ததன்றொ மாயை
அதை நீயென்று சொன்னால்
நீ மறைந்தொளிந்து போவாயோ?
இல்லை பேயென்று பெயரிட்டால்
மாயையும்
மறைந்தொழிந்து போய்விடுமோ?
அறிவே மாயை
சிந்தனையே அதற்கு சோரு
மாயை வளர சோரு விழையும் சேற்றில்
புழுவாய் நெளியுதம்மா வாழ்க்கை
அவ்வாழ்க்கையில் உடைமை கொள்தலின்
தீமைகள் சொல்வேன் கேளாயோ
-ஷ்ரவன்
Friday, July 6, 2018
ஹெத்தையம்மன் கெடாலஜி
ஆணி வேர் வரைக்கும் காய்ச்சுப்போச்சு
மனுஷன் மனசுலயும் ஈரம் பாய
மாரி பெய்யவேணுமம்மா
விண்ணுயர நின்ன
மரமும் மானமும்
பொதராதான் நிக்குதம்மா
ஆடு மாடு போல
நாங்களும் இல பறிச்சு தின்னுதா
வாழணுமா ?
-ஷ்ரவன்
Monday, April 30, 2018
Monday, April 2, 2018
கருங்கடலாகி
முழு மதி கண்ட
கடல் பேசிட
அலை அன்றி
வேறு மொழியேதடி
அங்குலம் அலகாய் கரையேரி வந்து
வானில் உன்னை காணும்
நாளும் வருமோ?
கவிதையில் உவமையில்
கைக்கிளயாய் கிடவோமா?
திரவத்தில் ஒளி கலந்து
நுரையாய் தவழுதடி
நம் காதல்...
சேர்ந்து மகிழ்தல் அல்ல
உணர்விலயத்தல் காதலென்று
சந்தம் சொல்லுதடி என் மொழி.... அலை மொழி...
-ஷர்வன்
கடல் பேசிட
அலை அன்றி
வேறு மொழியேதடி
அங்குலம் அலகாய் கரையேரி வந்து
வானில் உன்னை காணும்
நாளும் வருமோ?
கவிதையில் உவமையில்
கைக்கிளயாய் கிடவோமா?
திரவத்தில் ஒளி கலந்து
நுரையாய் தவழுதடி
நம் காதல்...
சேர்ந்து மகிழ்தல் அல்ல
உணர்விலயத்தல் காதலென்று
சந்தம் சொல்லுதடி என் மொழி.... அலை மொழி...
-ஷர்வன்
Thursday, November 2, 2017
ஒரு உருவம் உண்டு என்னிடம்
அனைத்து வார்த்தைகளுக்கும்
ஒரு உருவம் உண்டு என்னிடம் ...
அணுப்பிளவிற்கும் அது தரும்
சக்திக்கும் ,
கடவுளுக்கும் காதலுக்கும் அது தரும்
இன்பத்திற்கும் ,
நோய்க்கும் துன்பத்திற்கும் ,
உயிர்க்கும் ஆதரவற்ற கண்ணீருக்கும் உண்டு ,
அருவத்திற்கும் , முடிவிலிக்கும் கூட
அறுதியாய் இறுதியாய்
ஒரு உருவம் உண்டு .
அறியாதது ஏதுவானாலும்
உருவம் புனைந்து
இலக்கணம் வகுத்து
பெருமிதமாய் நிற்குது அறிவு ...
பாலையில் வாழ்வில்லை என்று
கழுகின் கால் பற்றிச் செல்லுது
மீனோன்று ..
சொன்னேனே
அனைத்து வார்த்தைகளுக்கும்
ஒரு உருவம் உண்டு என்னிடம் ...
-ஷ்ரவன்
ஒரு உருவம் உண்டு என்னிடம் ...
அணுப்பிளவிற்கும் அது தரும்
சக்திக்கும் ,
கடவுளுக்கும் காதலுக்கும் அது தரும்
இன்பத்திற்கும் ,
நோய்க்கும் துன்பத்திற்கும் ,
உயிர்க்கும் ஆதரவற்ற கண்ணீருக்கும் உண்டு ,
அருவத்திற்கும் , முடிவிலிக்கும் கூட
அறுதியாய் இறுதியாய்
ஒரு உருவம் உண்டு .
அறியாதது ஏதுவானாலும்
உருவம் புனைந்து
இலக்கணம் வகுத்து
பெருமிதமாய் நிற்குது அறிவு ...
பாலையில் வாழ்வில்லை என்று
கழுகின் கால் பற்றிச் செல்லுது
மீனோன்று ..
சொன்னேனே
அனைத்து வார்த்தைகளுக்கும்
ஒரு உருவம் உண்டு என்னிடம் ...
-ஷ்ரவன்
Subscribe to:
Posts (Atom)