Sunday, April 3, 2022

மெய் உணர்வு

என் உயிர் உற்றேகும் உடலே... உன்னாலே உயிர் உணர்வேனே...  --ஷர்வன்

Tuesday, October 12, 2021

கனவு தானே !!

கனவு தான் இதுவும்
விழித்திடு மனமே
 
அறியாமை உழன்று
அறிதலில் உவகை உணர்ந்தனயோ 
கனவு தான் இதுவும் 
விழித்திடு மனமே
 
உவகையுணர உழன்றாக வேண்டுமோ 
இரு நிலையின்றி 
ஒரு உயிர் என்று 
துறவை துணியத் தான் வேண்டுமோ 
 
கனவு தான் இதுவும் 
துணிந்திடு மனமே 
விழித்திடு 
 
--ஷர்வன்

Thursday, February 20, 2020

வாழ்வுடைத்தகைமை

தனியுடைமை பொதுவுடைமை 
பேசும் அறிவாளிகளுள்
உடைமை கொள்தலின் தீமைகள் 
உரைப்பவன் நான்


மெய்யுண்டு உணர்உண்டென்றால், 
உயிராமோ? 
உயிர்த்திருத்தலுண்டு உயிரிலில்லையென்றால்
பொய்யாமோ? 

உன் சிந்தணையை 
நீ பார்த்த நொடியில் 
பிறந்ததன்றொ மாயை

அதை நீயென்று சொன்னால்
நீ மறைந்தொளிந்து போவாயோ? 

இல்லை பேயென்று பெயரிட்டால்
மாயையும் 
மறைந்தொழிந்து போய்விடுமோ? 

அறிவே மாயை
சிந்தனையே அதற்கு சோரு
மாயை வளர சோரு விழையும் சேற்றில் 
 புழுவாய் நெளியுதம்மா வாழ்க்கை

அவ்வாழ்க்கையில் உடைமை கொள்தலின்
தீமைகள் சொல்வேன் கேளாயோ

-ஷ்ரவன்

Friday, July 6, 2018

ஹெத்தையம்மன் கெடாலஜி


ஆணி வேர் வரைக்கும் காய்ச்சுப்போச்சு
மனுஷன் மனசுலயும் ஈரம் பாய
மாரி பெய்யவேணுமம்மா

விண்ணுயர நின்ன
மரமும் மானமும்
பொதராதான் நிக்குதம்மா

ஆடு மாடு போல
நாங்களும் இல பறிச்சு தின்னுதா
வாழணுமா ?

-ஷ்ரவன்

Monday, April 30, 2018

ஓரிரவு

மெய் அறிவென்து யாதெனில்
தன் மெய் உணர்வதேயென்று
உரக்கச் சொல்லியது
நேற்றிரவு.

- ஷர்வன்

Monday, April 2, 2018

கருங்கடலாகி

முழு மதி கண்ட
கடல் பேசிட
அலை அன்றி
வேறு மொழியேதடி

அங்குலம் அலகாய் கரையேரி வந்து
வானில்  உன்னை காணும்
நாளும் வருமோ?

கவிதையில் உவமையில்
கைக்கிளயாய் கிடவோமா?

திரவத்தில் ஒளி கலந்து
நுரையாய் தவழுதடி
நம் காதல்...

சேர்ந்து மகிழ்தல் அல்ல
உணர்விலயத்தல் காதலென்று
சந்தம் சொல்லுதடி என் மொழி.... அலை மொழி...


-ஷர்வன்

Thursday, November 2, 2017

ஒரு உருவம் உண்டு என்னிடம்

அனைத்து வார்த்தைகளுக்கும்
ஒரு உருவம் உண்டு என்னிடம் ...

அணுப்பிளவிற்கும் அது தரும்
சக்திக்கும் ,

கடவுளுக்கும் காதலுக்கும் அது தரும்
இன்பத்திற்கும் ,

நோய்க்கும் துன்பத்திற்கும் ,
உயிர்க்கும் ஆதரவற்ற கண்ணீருக்கும் உண்டு ,

அருவத்திற்கும் , முடிவிலிக்கும் கூட
அறுதியாய் இறுதியாய்
ஒரு உருவம் உண்டு .

அறியாதது ஏதுவானாலும்
உருவம் புனைந்து
இலக்கணம் வகுத்து
பெருமிதமாய் நிற்குது அறிவு ...

பாலையில் வாழ்வில்லை என்று
கழுகின் கால் பற்றிச் செல்லுது
மீனோன்று ..

சொன்னேனே
அனைத்து வார்த்தைகளுக்கும்
ஒரு உருவம் உண்டு என்னிடம் ...

-ஷ்ரவன்