Friday, July 6, 2018

ஹெத்தையம்மன் கெடாலஜி


ஆணி வேர் வரைக்கும் காய்ச்சுப்போச்சு
மனுஷன் மனசுலயும் ஈரம் பாய
மாரி பெய்யவேணுமம்மா

விண்ணுயர நின்ன
மரமும் மானமும்
பொதராதான் நிக்குதம்மா

ஆடு மாடு போல
நாங்களும் இல பறிச்சு தின்னுதா
வாழணுமா ?

-ஷ்ரவன்

Monday, April 30, 2018

ஓரிரவு

மெய் அறிவென்து யாதெனில்
தன் மெய் உணர்வதேயென்று
உரக்கச் சொல்லியது
நேற்றிரவு.

- ஷர்வன்

Monday, April 2, 2018

கருங்கடலாகி

முழு மதி கண்ட
கடல் பேசிட
அலை அன்றி
வேறு மொழியேதடி

அங்குலம் அலகாய் கரையேரி வந்து
வானில்  உன்னை காணும்
நாளும் வருமோ?

கவிதையில் உவமையில்
கைக்கிளயாய் கிடவோமா?

திரவத்தில் ஒளி கலந்து
நுரையாய் தவழுதடி
நம் காதல்...

சேர்ந்து மகிழ்தல் அல்ல
உணர்விலயத்தல் காதலென்று
சந்தம் சொல்லுதடி என் மொழி.... அலை மொழி...


-ஷர்வன்

Thursday, November 2, 2017

ஒரு உருவம் உண்டு என்னிடம்

அனைத்து வார்த்தைகளுக்கும்
ஒரு உருவம் உண்டு என்னிடம் ...

அணுப்பிளவிற்கும் அது தரும்
சக்திக்கும் ,

கடவுளுக்கும் காதலுக்கும் அது தரும்
இன்பத்திற்கும் ,

நோய்க்கும் துன்பத்திற்கும் ,
உயிர்க்கும் ஆதரவற்ற கண்ணீருக்கும் உண்டு ,

அருவத்திற்கும் , முடிவிலிக்கும் கூட
அறுதியாய் இறுதியாய்
ஒரு உருவம் உண்டு .

அறியாதது ஏதுவானாலும்
உருவம் புனைந்து
இலக்கணம் வகுத்து
பெருமிதமாய் நிற்குது அறிவு ...

பாலையில் வாழ்வில்லை என்று
கழுகின் கால் பற்றிச் செல்லுது
மீனோன்று ..

சொன்னேனே
அனைத்து வார்த்தைகளுக்கும்
ஒரு உருவம் உண்டு என்னிடம் ...

-ஷ்ரவன் 





Saturday, August 5, 2017

வாழ்கை

கண்ணாடிக் கூண்டுக்குள்
எங்கும் என் அறிவின்
பிரதிபலிப்பு

அத்வைதமாய்
நீக்கமற நிறைந்திருக்கும்
ஒருவித கடுப்பு

-ஷர்வன்

யாதுமானவளே

மேகம் சிறை பிடிக்கும்
மாமலையென நிற்கிறாள்.

கட்டித் தழுவி
கண்ணீராய், அவள்
காலடியில் கரைகயில்
கால சுழற்சியில்
என்னை
மறுசுழற்சி செய்கிறாள்.

எப்பாதை சென்றாலும்
எக்கடல் சேர்ந்தாலும்
மீண்டும் உன்னை
கட்டித் தழுவிடும்
வரம் வேணுமடி...

-ஷர்வன்

Thursday, May 25, 2017

விடுதலை


சந்தம் தேவையில்லா சத்தமடி 
வழியில்லா வான்வெளியெங்கும்  பரவுதடி 

என் மனமும்  அதுபோல 
வாழ்ந்திடத்தான் ஏங்குதடி நித்தமும் ...

-ஷ்ரவன்