Thursday, November 2, 2017

ஒரு உருவம் உண்டு என்னிடம்

அனைத்து வார்த்தைகளுக்கும்
ஒரு உருவம் உண்டு என்னிடம் ...

அணுப்பிளவிற்கும் அது தரும்
சக்திக்கும் ,

கடவுளுக்கும் காதலுக்கும் அது தரும்
இன்பத்திற்கும் ,

நோய்க்கும் துன்பத்திற்கும் ,
உயிர்க்கும் ஆதரவற்ற கண்ணீருக்கும் உண்டு ,

அருவத்திற்கும் , முடிவிலிக்கும் கூட
அறுதியாய் இறுதியாய்
ஒரு உருவம் உண்டு .

அறியாதது ஏதுவானாலும்
உருவம் புனைந்து
இலக்கணம் வகுத்து
பெருமிதமாய் நிற்குது அறிவு ...

பாலையில் வாழ்வில்லை என்று
கழுகின் கால் பற்றிச் செல்லுது
மீனோன்று ..

சொன்னேனே
அனைத்து வார்த்தைகளுக்கும்
ஒரு உருவம் உண்டு என்னிடம் ...

-ஷ்ரவன் 





Saturday, August 5, 2017

வாழ்கை

கண்ணாடிக் கூண்டுக்குள்
எங்கும் என் அறிவின்
பிரதிபலிப்பு

அத்வைதமாய்
நீக்கமற நிறைந்திருக்கும்
ஒருவித கடுப்பு

-ஷர்வன்

யாதுமானவளே

மேகம் சிறை பிடிக்கும்
மாமலையென நிற்கிறாள்.

கட்டித் தழுவி
கண்ணீராய், அவள்
காலடியில் கரைகயில்
கால சுழற்சியில்
என்னை
மறுசுழற்சி செய்கிறாள்.

எப்பாதை சென்றாலும்
எக்கடல் சேர்ந்தாலும்
மீண்டும் உன்னை
கட்டித் தழுவிடும்
வரம் வேணுமடி...

-ஷர்வன்

Thursday, May 25, 2017

விடுதலை


சந்தம் தேவையில்லா சத்தமடி 
வழியில்லா வான்வெளியெங்கும்  பரவுதடி 

என் மனமும்  அதுபோல 
வாழ்ந்திடத்தான் ஏங்குதடி நித்தமும் ...

-ஷ்ரவன் 

Sunday, February 19, 2017

சக்தி சரணம்

ஓம் எனும் ஒலியில் தெடங்கியதாய் ஓர் கூற்று ,
ஒன்றுமிலா வெளியதனில்
ஒளியில் தொடங்கியதாய் ஒரு தேற்றம்,

ஒலி அழகின் உச்சம் 
அகரத் தமிழென்று 
அறிந்தேனே,

ஒளி அலகின் உச்சம்
அவள் வடிவென்று உணர்ந்தேனே ,

ஒலியும்  ஒளியும் 
அறிந்ததும்  உணர்ந்ததும்
யாவும் அன்னை சக்தியென
தெளிந்தபின்
என் சித்தம் சிவனாகிட கண்டேனே

- ஷர்வன்

Thursday, September 15, 2016

பிள்ளையார் காதல்


இன்னும் படபடக்கும் இதயம் அடங்கவில்லை ,
கண்கள் இன்னும் தெளியவில்லை ,
வியர்வையினூடே கிசுகிசுத்தாள்

வழிப்பசிக்கு முத்தங்கள்
கட்டித் தருகிறேன்
போய் உலகம் வென்றுவாவென்றாள்.

என் உலகமே நீதான்
வென்று சில நிமிடங்கள் ஆகிறது,
களிப்பில் இளைப்பாறுகிறேன்.

அந்தக்  கண்களில் மொழிபெயர்பு ...
இனி பழம் கிடைக்கப்போவதில்லை

-ஷ்ரவன்

Friday, September 9, 2016

அவ்வண்ணமே அமையட்டும் அம்மணம்

விரச எல்லை தாண்டிவிட்ட விரகம் ,
நாகரீக எல்லை தாண்டிவிட்ட அசிங்கமான கோபம் ...
....
....
....

உடைமட்டுமல்ல
ரசனையும் சுமைதான்,

சிகரத்தின் அடிவாரத்தில்
கழற்றிவிட்ட ரசனை
புள்ளியாய் தெரிகிறது.
உயிர் காக்க தேவையொன்றுமில்லை
உயிர் மட்டும் பிடித்துக்கொண்டு
உச்சி தொட்டுவிட தவழும்
மலையேறியின்
வெறிதான் எனக்கும்.

கொடுக்க காதலும் முத்தமும்
தீர்ந்தாயிற்று,
துரோகிக்கு தரும்
கற்பனைத் தண்டனைகள் மட்டுமே
மீதியிருக்கிறது.

சத்தமும் ரத்தமும்
போர் வண்ணமாய் ...

விசும்பல் சத்தம்
வெற்றியின் பாதையில்
போர் செல்லுவதை தெரிவிக்கிறது.

உன் விசும்பல் எனக்கும்
என் வெறி உனக்கும்
அவரவர் வெற்றிகள்.

வலுவின்மை தரும்
இயலாமை,
அம்மண நிலையிலும்
அவமானம்.

என் மானத்தை
கோட்டுமேட்டிலோ? காலிடிக்கிலோ?
புதைத்தாலோ 

கொஞ்சலில் ஆரம்பமாகி,
மண்டியிட்டு கெஞ்சும் என் சொல்லிலோ,

காக்கவிட்டு , தவிக்கவிட்டு
ஏறு கணத்தில் ,சீறு சினதிற்கு
பிச்சையாய் நீ தரும்
புன்னகை தருணத்திலோ

உன் பழிவெறி தீருமாயின்
அவ்வண்ணமே அமையட்டும் நம் அம்மணக் கோலம்.

-ஷ்ரவன்